சின்னாளபட்டி, சின்னாளபட்டி வடக்குத் தெருவில், விநாயகர், முத்தாலம்மன், பட்டாளம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி அழைப்பு, கரகம் பாலித்தல், கண் திறப்பு நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.