விஸ்வாமித்திரரை குருவாக ஏற்ற ராம, லட்சுமணர் காட்டுக்குப் புறப்பட்டனர். அங்கு தாடகை என்னும் அரக்கியை வதம் செய்யும்படி விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளையிட்டார். பெண்ணைக் கொல்வது கூடாது என்ற வேத கட்டளை அவரது நினைவுக்கு வந்தது. ஆனாலும் குருவான விஸ்வாமித்திரரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தார். வில்லில் அம்பு தொடுத்து தாடகை மீது ஏவினார். மலை போன்ற பெரிய தோள்களை உடைய அவளும் மண்ணில் சரிந்து உயிர் விட்டாள். வேதத்தை மீறினால் பாவம் உண்டாகும்என்றாலும் அந்த கொலைப் பாவம் ராமனைத் தீண்டவில்லை. ஏனெனில் அந்த வேதமே, யாருடைய பாவம் யாரைச் சேரும் என்று விளக்கம் தருகிறது.மக்களின் பாவம் ஆளும் மன்னரையும், மனைவியின் பாவம் கணவனையும், சீடனின் பாவம் குருநாதரையும் சென்றடைகிறது.