பதிவு செய்த நாள்
27
மே
2017
04:05
ஒருமுறை நபிகள் நாயகத்துடன், முஆத் பின் ஜபல் (ரலி)என்பவர் வண்டியில் சென்று கொண்டிருந்தார். நாயகம் முன்னாலும், முஆத் பின்னாலும் இருந்தனர். நாயகம் அவரை சத்தமாக அழைத்தார். அதற்கு முஆத், “நபிகளாரே! நான் பின்னால் தான் இருக்கிறேன், என்ன சொல்லுங்கள்?” என்றார். நாயகம் எதுவும் பேசவில்லை. நாயகம் மீண்டும் அவரை அழைத்தார். இப்போதும், முஆத் அவர்கள், “நாயகமே, இதோ..நான் உங்கள் அருகில் தான் உள்ளேன்,” என்றார். நாயகம் இப்போதும் அமைதியாகி விட்டார். வண்டி சிறிது து?ரம் கடந்ததும் மீண்டும் அழைத்தார் நாயகம். “அண்ணலே, தாங்கள் என்னிடம் என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள். உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலாயிருக்கிறேன்,” என்றார் முஆத். “முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா?” என்றார்.
“அதைத் தாங்களே சொல்லுங்கள். ஏனெனில் அல்லாஹ்வுக்கும், அவனது து?தரான தங்களுக்குமே அது தெரியும்,” என்றார் முஆத்.
“மக்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு யாரையும் ஈடு வைக்கக் கூடாது,” என்றார்.
மீண்டும் நபிகள் முஆதிடம், “அல்லாஹ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூறுகிறேன். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து வாழும் மக்களை அவன் துன்பம் தராமல் இருக்க வேண்டும்,” என்றார். இதை மும்முறை அழைத்து ஏன் கூறினார் புரிகிறதா? ஒரே தடவையில் அழைத்து இந்த முக்கிய கருத்தை சொல்லி விட்டால், சில காலத்தில் இதை மறந்து விடலாம். ஆனால், மும்முறை அழைத்துச் சொன்னதன் மூலம் இந்நிகழ்ச்சி மறக்காமல் நினைவில் இருக்கும். அப்போது சொல்லப்பட்ட கருத்தும் மறக்காது என்பதால், நாயகம் இந்த யுக்தியைப் பயன்படுத்தினார்.
பொன்மொழிகள்
* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவகை நன்றி.
* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும், அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றி.
* எனது முயற்சியோ, ஆற்றலோ எதுவுமே இல்லாமல் எனக்கு உணவு கொடுத்த அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகுக! என்று உணவு உண்ட பிறகு, எவர் கூறுகின்றாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.