ராமநாதபுரத்தில் மழை வேண்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2017 06:05
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிவன் கோயிலில் மழை வேண்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பொய்த்துப்போன பருவ மழையால், கடும் வறட்சி நிலவி வருகிறது. நீர் நிலைகள் வறண்டு, குடி நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். கோயில்களில் வருண ஜெபமும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெரிய சிவன் கோயில் உள்ளது. இங்கு மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. இதில் முக்கியமாக நந்தியை தண்ணீரில் மூழ்கிட செய்தால் மழை பெய்யும் என, மக்கள் நம்பிக்கையுள்ளது. இதன் படி நந்தியை சுற்றி தண்ணீர் தேக்கி மூழ்க செய்தனர். பின் நந்தி தேவருக்கு பால், பழம் பன்னீர், இளநீர் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின் சிறப்பு பூஜையும் மகா தீபாரதனையும் நடந்தது. வருண ஜெபத்தினை மனோகரன், ரமேஷ் குருக்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் செயல்அலுவலர் சுவாமிநாதன், திவான் மகேந்திரன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.