Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் ... ஓசூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா: நாளை கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
01:06

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜூன், 2) கோலாகலமாக துவங்குகிறது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 14 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதற்காக, கோவிலில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கோவில் கோபுரம் முன் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜூன், 2) முதல், கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நாளை காலை, 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ
பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை அலங்காரம், மாலை, 6:00 மணிக்கு மிருத்ஸங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், இரவு, 8:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மறுநாள் (ஜூன், 3) காலை, 8:00 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, மாலை, 6:00 மணிக்கு மூலவர், மரகதாம்பிகை அஷ்டபந்தனம் சாத்துதல், இரவு, 8:00 மணிக்கு, மூன்றாவது கால யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வரும், 4 அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காவது கால அனுப்தே யாக சாலை பூஜை ஹோமம், 6:00 மணிக்கு பூர்ணாகுதி, 7:00 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 8:00 முதல், 8:30 மணி வரை,
அனைத்து பரிவார மூர்த்திகள், அம்பாள், மூலவர் மகா கும்பாபிஷேகம், காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம் ஆகிய
நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar