காஞ்சி மாநகரில் அத்திவரதர் கோயிலில் வைகாசி விசாகத்தில் நடைபெறும் கருடோற்சவமும், ஏழாம் நாள் நடக்கும் தேர்த் திருவுலாவும் மிகச் சிறப்புடையவை. இந்தத் தேர், ஒரு தடவை காஞ்சிபுரத்து அம்மைச்சி என்கிற பெண்புலவர் வீட்டருகில் வரும்போது திசை மாறி அவர் வீட்டையே இடித்துத் தள்ளிவிடுவது போல் வந்து விட்டதாம். அப்போது அந்தப் பெண் புலவர் கம்பீரமாக எதிர்த்து நின்று ஒரு கவி பாடினாராம்.
பார்ப்பார் குரங்காய் படையெடுத்து வந்தீரோ? தேப்பொருளே! கச்சிச் செல்வரே! கோப்பாகக் கொம்மை சிங்காரலங்கைக் கோட்டை என்று வந்தீரோ? அமைச்சி வாழும் அகம்! என்று அவர் பாடியதும், வரதரின் தேர் அப்பால் விலகிச் சென்று விட்டதாம். புலமைக்குப் பெருமாள் அளித்த பெருமை இதென்று போற்றப்படுகிறது.