ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2017 12:06
காரியாபட்டி: காரியாபட்டி தோணுகாலில் ஸ்ரீமது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அகில இந்திய தேவாங்கர் குலகுரு ஹம்பி ேஹமகூட ஜெகத்குரு ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் முதல் கால யாகத்தை துவக்கி வைத்து, கோபுர கலசத்தை நிர்மாணித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாநில தேவாங்கர் மகாசபை தலைவர் கிரிகண்ணன், புதுச்சேரி தேவாங்கர் மகாஜனசபைத் தலைவர் சுபாஷ், தேவாங்கர் மகளிர் அணித் தலைவி ராஜராஜேஸ்வரி பேசினர். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் தோணுகால் தேவாங்கர்இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.