கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த, கொத்தூர் கிராமத்தில் உள்ள, ஏழு கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. பர்கூர் அடுத்த, கொத்தூர் சிங்கார கிராமத்தில் உள்ள செல்வ கணபதி, பொதல குண்ட மாரியம்மன், தேச மாரியம்மன், கோவிந்தராஜிலு சாமி, வெங்கடாஜலபதி மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில், கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் ?ஹாம பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் அனைத்து கோவில்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு மேல் சென்னப்பனின் மாரியம்மன் நாடகம் நடந்தது.