பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
திருப்பூர் : திருப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று, பூமிநீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன், ஸ்ரீ வீரராகவப் பெருமாள், சேஷ வாகனத்திலும்; ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை, இன்று நடக்கிறது. வரும், 6ம் தேதி, சிறப்பு அபிஷேகம்; அன்று மாலை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. வரும், 7ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மகா அபிஷேகம்; மாலை, 3:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி
கோவில் தேரோட்டமும்; வரும், 8ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.