பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
சேலம்: சேலம், குகை, மீனாட்சிபுரம் ஓம்சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 3 காலை, 7:00 மணிக்கு, மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. மாலை, 6:00 மணிக்கு
முதல் கால யாகபூஜை, இரவு, 9:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 6:30க்கு யாத்ராதானம் நடந்தது. 7:30க்கு கோபுர
கும்பாபிஷேகம், 8:05க்கு விநாயகர், சக்தி காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, ஓம்சக்தி, பராசக்தி என, பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.