Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரு இருதய ஆண்டவர் ஆலய 100 ம் ஆண்டு ... சுகவனேஸ்வரர் கோவில் தொன்மை மாறாமல் புனரமைப்பு! சுகவனேஸ்வரர் கோவில் தொன்மை மாறாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக மக்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்: திருவாடுதுறை ஆதீனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2011
11:11

ஆழ்வார்குறிச்சி: தமெக்கென பிரார்த்தனை செய்யாமல் உலக மக்களுக்கெல்லாம் நன்மை கிடைக்க வேண்டுமென இறைவனிடம் வேண்ட வேண்டும் என திருவாடுதுறை ஆதீனம் கூறினார்.கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலுக்கு வருகை தந்த சீர் வளசீர் 23வது குருமகா சன்னிதானம் திருவாடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிய பரமாச்சாரியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆன்மீக பணியில் ஈடுபட்டு வரும் அம்பாசமுத்திரம் ஏ.பி.ஆர்.ஏஜன்சிஸ் அண்ணாமலை செட்டியாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.பின்னர் அருளாசியில் உரையில், ""நம்மால் இயன்ற பணியை கோயிலுக்கு செய்ய வேண்டும். நம் சக்திக்கு ஏற்றவாறு திருப்பணி செய்வது முக்கியம். ஆலயம் செல்வது பக்தியை மட்டுமல்ல நல்ல பழக்க வழக்கங்களையும், கலைகளையும், ஓவியம், காவியம், கட்டடம், சிற்பம் போன்ற கலைகளையும் வளர்க்கிறது. கோயில் பணியாளர்களுக்கு முன்பெல்லாம் அரசு ஊதியம் வழங்கவில்லை. கோயிலை மையமாக வைத்து கோயிலும் மக்களும் வளர்ந்தனர். கோயில்கள் இருப்பதால் அங்கு 10 பேருக்காவது வேலை கிடைத்தது.தினமும் தவறாமல் பூஜைக்கு செல்ல வேண்டும். முதலில் அவரவர் தம் சொந்த ஊரில் உள்ள கோயில்களை பேண வேண்டும். அதற்கு பின்னர் தங்களுக்கு இஷ்டமான சபரிமலை, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு செல்லலாம். முதலில் தம் சொந்த ஊரில் உள்ள கோயில்களை தான் பராமரிக்க வேண்டும். பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் பேணுவது போல் கலை பொக்கிஷங்களை கொண்ட கோயில்களை பராமரிக்க வேண்டும்.பக்தியோடு பன்னிரு முறைகளை பாட வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். தமக்கென பிரார்த்தனை செய்யாமல் உலக மக்களுக்கெல்லாம் நன்மை கிடைக்க வேண்டுமென இறைவனிடம் வேண்ட வேண்டும். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஒவ்வொரு திருமுறைகளை பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இறைவன் எல்லா உலகிலும் கலந்தும் கடந்தும் உள்ளதால் தான் அவரை கடவுள் என்கிறோம். தெய்வப் பணியில் ஈடுபடுவது மிகவும் பாக்கியமானதாகும் என்றார்.முன்னதாக அனைத்து பக்தர்களுக்கும் விபூதி கொடுத்து ஆசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar