Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக மக்களுக்கெல்லாம் பிரார்த்தனை ... சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் தொன்மை மாறாமல் புனரமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 நவ
2011
11:11

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், சுயம்பு வடிவில் இறைவன், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுகபிரம்ம ரிஷி சிவன் அருள் பெற்ற தலமாதலால், சுகவனேஸ்வரர் என்று மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. கடந்த, 98ம் ஆண்டு சுகவனேஸ்வரர் கோவிலுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.மீண்டும் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலை புதுப்பித்து, மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். கோவில் புதுப்பிப்பு பணியில், புரதான கட்டிட கலை, பழைமை, தொன்மை மாற வாய்ப்புள்ளதால், தொல்லியல் துறை மூலம் கோவிலை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களின் அறிவுறுத்தல்படி, சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இதையடுத்து, தொல்லியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் சந்திரபிரகாஷ் சிங் உத்தரவின் பேரில், தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் நாராயணன், ஸ்தபதி அருண்சபரி ஆகியோர், நேற்று சுகவனேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், கோவில் கோபுரம், வளாகம் உள்ளிட்டவற்றை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் நாராயணன் கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவிலின் தென்மை குறித்து ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணியில் சிலைகள், கட்டிடங்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையிலும், பழைமை மாறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் ஆய்வு குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி, கோவில் சீரமைப்பு பணியை இந்து சமய அறநிலையத்தறை அதிகாரிகள் மேற்கொள்வர். கோவில் ஆய்வு குறித்து, அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar