பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
01:06
திருவள்ளூர் : சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தன.சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள வழி துணை விநாயகர் கோவில், ஆயில்மில் வெற்றி விநாயகர் கோவில், பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகர் காரிய சித்தி கணபதி கோவில், திருவள்ளூர் பஜார் தெருவில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், வரசித்தி விநாயகர் சன்னதி உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவள்ளூர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், செல்வ விநாயகருக்கு அபிஷேகமும், தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் 11 விநாயகர்கள் அடங்கிய விநாயகர்
சபையில், நேற்று, சிறப்பு அபிஷேக ஆராதனையும், திருவள்ளூர் ஜெயா நகர் விஸ்தரிப்பு வல்லப விநாயகர் கோவிலில் பிரார்த்தனை, தேங்காய் கட்டுதல் நிகழ்ச்சியும், கணபதி
ஹோமமும் நடைபெற்றது.
சோழவரம் அடுத்த, நத்தம் கிராமத்தில் (இ-கணபாக்கம்) ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, சங்கட
நிவாரண ஹோமம் துவங்கி, மதியம் 1:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் நிறைவடைந்தது. சிறப்பு அலங்காரத்துடன் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது.