Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை ... அத்திமாஞ்சேரிபேட்டையில் அம்மன் ஜாத்திரை விழா அத்திமாஞ்சேரிபேட்டையில் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
11:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, ராஜேந்திர சோழன் கால நடுகல் சிதைக்கப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள, கெரகோட அள்ளியில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றை, 1974ல், தமிழக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அதில், ராஜேந்திர சோழனின், கங்கை , கடாரம் வெற்றியை குறிப்பிடும் வாசகங்கள் உள்ளன. இந்த கல்வெட்டை படியெடுத்த தொல்லியல் துறையினர், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால், நடுகல் சிதை க்கப்படடு, பாதியளவே உள்ளது. இது குறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: நடுகல்லில், வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. புறமலை நாட்டைசேர்ந்த, பாகலப்பள்ளியில் சூழ்ந்த எதிரி படையை எதிர்கொண்ட, பப்பையன் என்ற வீரன் இறந்து விடுகிறான். அவனது வீரத்தைபோற்றும் வகையில், மகன் பாலிதேவன், நடுகல்லை பதிவு செய்துள்ளான். அதில், தந்தையின் வீரம்; அவருக்கு பெண் கொடுத்த மாமனார் ப�ோன்ற விபரங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த அரிய நடுகல், தற்போது, துண்டு துண்டாக சிதை க்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பொக்கிஷத்தை கண்டு படியெடுத்த, தொல்லியல் துறை, 50 ஆண்டுகள் கூட,அவற்றை பாதுகாக்காதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக ... மேலும்
 
temple news
பல்லடம்; அப்டேட் செய்யப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar