பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
12:06
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி சென்றாய பெருமாள், வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில், பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவிலின் பின்புறத்தில், சென்றாயபெருமாள், வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 2014 ஜூன், 21ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாண்டுகள் முடிந்து, நேற்று, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இருந்த கரடி கம்பத்திற்கு, திருக்கொடி ஏற்றப்பட்டது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. மல்லசமுத்திரம், காளிப்பட்டி, ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையம், மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா, கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.