பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
01:06
காளிப்பட்டி: ஆஞ்சநேயருக்கு பிரதிஷ்டை செய்த, நான்காம் ஆண்டு தொடக்க விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். சேலம், காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில், 2014 ஜூன், 21ல், வீரபக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, ஆண்டுதோறும் ஜூன், 21ல் கும்பாபிஷேக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அதன்படி, நான்காம் ஆண்டு தொடக்க நாளான நேற்று காலை, மூலவர் சென்றாய பெருமாள் மற்றும் வீரபக்த ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. மலர்களால் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், வெள்ளி கவசத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, முத்தனம்பாளையம், மல்லசமுத்திரம், அரியானூர், சீரகாபாடி மற்றும் காகாபாளையம் மக்கள் பலர், சுவாமியை வழிபட்டனர்.