சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன், கைலாசநாதர் கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக இளநிலை உதவியாளர் சுகன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஜெயமணி, சென்னிமலை கோவில் செயல் அதிகாரி அருள்குமார் முன்னிலை வகித்தனர். மாரியம்மன் கோவில் உண்டியலில், 66 ஆயிரத்து, 110 ரூபாய், கைலாசநாதர் கோவில் உண்டியலில், 9 ஆயிரத்து, 202 ரூபாய் காணிக்கை இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், கோவில் பணியாளர், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.