பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
01:06
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கோதண்டராமர் கோவில் குளத்தில், அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையிர், உழவார பணி மேற்கொண்டு, குளத்தை சீரமைத்தனர். செங்கல்பட்டு, அண்ணா சாலையில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோதண்டராமர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பெரிய குளத்தில், பிளாஸ்டிக் பை மற்றும் செடிகள் வளர்ந்திருந்தன.இதை சீரமைக்க, அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை நிர்வாகிகள், கோவில் நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டனர். நிர்வாகம் அனுமதி அளித்ததையடுத்து, நேற்று, குளத்தில் உழவார பணி நடந்தது. குளம் சீரமைக்கப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாக ஈடுபட்டனர்.