பெருந்துறை: பெருந்துறை அருகே, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே, சின்னாத்தாள் கோவில் உள்ளது. நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதை தொடர்ந்து, கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையில் யாகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.