மரக்காணம்: மரக்காணம் அடுத்த முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பரிசாஹூதி, நான்காம் கால மூலிகை திரவிய ஹோமங்கள், மஹாபூரணாஹூதி நடந்தது. தொடர்ந்து 9:45 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.