பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
12:07
திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தி பூஜையை முன்னிட்டு, நாளை, வினாயகர் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், சங்கட நிவாரண ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. நாளை, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் ரயிலடி வழித்துணை வினாயகர் கோவில், ஆயில் மில் அரச மரத்தடி வினாயகர் கோவில். தீர்த்தீஸ்வரர் கோவிலில் வரசித்தி வினாயகர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ வினாயகர் கோவில், பெரியகுப்பம் மீனாட்சி நகரில், காரிய சித்தி கணபதி கோவில்களில் அபிஷேகம் நடைபெற உள்ளது. ஜெயா நகர் விஸ்தரிப்பில் மகா வல்லப வினாயகர் கோவிலில் மாலை, கணபதி ஹோமமும், இரவு மகாதீபாராதனையும், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் உள்ள 11 வினாயகர்கள் கொண்ட வினாயகர் சபையிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், பஞ்சேஷடி அருகே, நத்தம் கிராமத்தில் வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம், ககார ஸகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அலங்காரத்துடன் மதியம் மகா தீபாராதனையும் நடைபெறும்.