Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் அருகில் மழை நீர் காஞ்சியில் ... கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேள்வி பூஜை: சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு 108 பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வேள்வி பூஜை: சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு 108 பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
01:07

தூத்துக்குடி:எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீகாளி பராசசக்தி தவசித்தர் பீடத்தில் 33ஆம்ஆண்டு ஆனி மாத திருவிழாவினையொட்டி சக்தி மாலை இருமுடி காணிக்கை செசலுத்துதல் மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடந்தது.

உலக நன்மை வேண்டியும், மழை பெய்யவும், இயற்கை செழிக்கவும் வேண்டி ஸ்ரீ காளி பராசக்தி அம்மனுக்கு ராமமூர்த்தி சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய மாட்டு வண்டி, ஏர் கலப்பை, தொட்டில், விளையாட்டு உபகரணங்கள், பட்டு சேலைகள், 51 வகை உணவுகள், பழங்கள், அரிசி, பருப்பு, நவதானியங்கள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் போட்டு வேத மந்திரங்கள் முழங்க வேள்வி பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 42 அடி உயர வெட்காளியம்மன் சிலைக்கு 108 குடங்கள் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ராமமூர்த்தி சுவாமிகள் வெண்கல தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து செவ்வாடை அணிந்து, இருமுடி கட்டி கோவிலுக்கு வந்திருந்தனர். தவசித்தர் பீடத்தில் இருமுடியை இறக்கி வைத்து காணிக்கைகளை செலுத்தி அபிஷேகம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar