திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான விளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா, வரும் 18ம் தேதி விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு ஆடிப்பூர பெருவிழா நடைபெறவருக்கிறது.
விழாவின் நிகழ்ச்சி நிரல்:
18.07. 2017 விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி 19.07.2017 மாலை 6.45 மணிக்கு அருள்மிகு மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணி உற்சவ மூர்த்தி புறப்பாடு (உள்பிரகாரம்) 20.7.2017 மாலை 6.45 மணிக்கு அ/மி மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு சாமி புறப்பாடு (உள்பிரகாரம்) 21.07.2017 மாலை 6.45 மணிக்கு அ/மி மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு அம்பாள் புறப்பாடு (உள்பிரகாரம்) சிம்ம வாகனம். 22.07.2017 மாலை 6.45 மணிக்கு அ/மி. மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு அம்பாள் மயில் வாகனம் புறப்பாடு (உள்பிரகாரம்) 23.07.2017, மாலை 6.45 மணிக்கு அ/மி. மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு அம்பாள் ஐராவத வாகனத்தில் புறப்பாடு (உள்பிரகாரம்) 24.07.2017 மாலை 6.45 மணிக்கு அ/மி மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு பூதவாகனம் அம்பாள் புறப்பாடு (உள்பிரகாரம்) 25.07.2017 மாலை 6.45 மணிக்கு அ/மி மதுரபாஷினிக்கு அபிஷேகம் இரவு 8.00 மணிக்கு ரிஷப வாகனம் அம்பாள் புறப்பாடு (உள்பிரகாரம்) 26.07.2017 காலை 9.45 மணிக்கு அ/மி மதுரபாஷினிக்கு பூர மகா அபிஷேகம், காலை 11.30 மணிக்கு அம்பாள் பாத தரிசனம், அம்பாளுக்கு அமுதம் (சாப்பாடு) சமர்பணம் செய்தல், மாலை 6.45 மணிக்கு அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, மாலை 7.45 மணிக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தல். 27.07.2017 மாலை 6.45 மணிக்கு விடையாற்றி.