மேற்கு வங்கத்தில் நாகப்பாம்புகளுடன் பக்தர்கள் பேரணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2017 02:07
கோல்கட்டா:மேற்குவங்க மாநிலம் பிஷன்பூர் பகுதியில் பருவநிலை மாறி பூமி குளிர்ந்தால் நாகதெய்வமான மானசாதேவிக்கு நன்றி சொல்லும் விதமாக பாம்புகளுடன் ஊர்வலமாக சென்று மானசாதேவிக்கும் சிவனுக்கும் பூஜை செய்கின்றனர் இங்குள்ள பழங்குடியின மக்கள். பூஜையினால் மானசாதேவியின் அருள் கிடைக்கும் என்றும் ஆண்டு முழுவதும் நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கை. இப் பேரணியில் நல்லபாம்புகள், கட்டுவிரியன், ராஜ நாகங்கள், ஆகிய இன பாம்புகளை பயன்படுத்தினர்.