பதிவு செய்த நாள்
04
ஆக
2017
01:08
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கடை வீதி மாரியம்மன் கோவிலில், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, அம்மன் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லாலாப்பேட்டை, கடைவீதி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 9:00 மணியளவில் அம்மனுக்கு வெங்கடாஜலபதி, கஜலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டனர். இதேபோல, மாயனூர் செல்லாண்டியம்மன் காவிரி கரையில், ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் நாளை, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை காணவும், பங்கேற்கவும் பக்தர்கள் மகாதானபுரம் வந்துள்ளனர்.