செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா, துவங்கியது. செஞ்சி பி. ஏரிக்கரை மீதுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் 46வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கொடியேற்று விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றினர். தொடர்ந்து மகா தீபாராதனையும், உற்சவர்கள் கோவில் உலாவும் நடந்தது. பக்தர்களுக்கும் காப்பு அணிவித்தனர்.