Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! இன்று கார்த்திகை இரண்டாம் சோமவாரம்! இன்று கார்த்திகை இரண்டாம் சோமவாரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏமாற்றத்தில் ஐயப்ப பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 நவ
2011
10:11

பழநி : பழநி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நீடிக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை ஆர்வமுடன் வாங்கி செல்வர். பஞ்சாமிர்தம் மலைக்கோயில், அடிவாரம், வின்ச்,ரோப்கார் ஸ்டேஷன்கள் உட்பட எட்டு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, தனியார் சிலரும் பஞ்சாமிர்தத்தை அடிவார பகுதியில் விற்கின்றனர். சில வாரங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினமாக இருந்ததால், பக்தர்களின் வருகை அதிகரித்தது. காலை 10 மணிக்கே, கோயில் விற்பனை நிலையங்களில் பஞ்சாமிர்தம் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டு நாட்களாக பழநியில் செயற்கையாக ஏற்பட்டுள்ள பஞ்சாமிர்த தட்டுப்பாட்டால், பக்தர்கள் காலியான கடைகளை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் சரத்:மலைக்கோயில் கடையில் பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. அடிவாரத்தில் வாங்கி கொள்ள அறிவுறுத்தினர். ஆனால், தனியார் கடைகளில் மட்டுமே பஞ்சாமிர்தம் தாராளமாக கிடைக்கிறது. கோயில் நைவேத்திய பிரசாதம் கிடைக்காததும், ஏமாற்றமாக உள்ளது. திருச்சி கணேசன்: தனியாரிடம் வாங்குவதை விட, பிரசாதமாக கோயில் தயாரிப்பையே வாங்கிச்செல்ல எண்ணினேன். ஆனால், கோயில் கடைகளில் பஞ்சாமிர்தம் கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது. சீசன் நேரம் என்று தெரிந்தும், தேவையான அளவு உற்பத்தி செய்யாமல் கோயில் நிர்வாகம் இருந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலமாக இருப்பதால், அதிக பஞ்சாமிர்த டின்களை இருப்பில் வைக்க முடியவில்லை. தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். செயற்கையான தட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவது நீடிக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar