Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதகாளியம்மன் கோயில் பங்குனி ... பழநி தைப்பூச விழாவில் தெப்பத்தேரோட்டம் பழநி தைப்பூச விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை மகிழ்வோடும் அன்போடும் வழிபடவேண்டும்
எழுத்தின் அளவு:
இறைவனை மகிழ்வோடும் அன்போடும் வழிபடவேண்டும்

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
12:02

திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.


கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம் பேசியதாவது:


பெருமானை இரு கரம் கூப்பி வழிபடுபவர்களுக்கெல்லாம், சுவாமி அருள்புரிகிறார். எப்பேர்ப்பட்ட நிலையில் இருந்தாலும், சுவாமிக்கு அடிமை என்கிற நினைப்பு வந்து, வழிபாடு செய்பவர்களை கடவுள் காப்பாற்றுகிறார் என்கிற உன்னதமான கொள்கையை திருவாசகம் சொல்கிறது.


இதற்கு முன் எத்தனையோ தவறுகள் செய்திருக்கலாம். எப்போது மனம் திருந்தி, சிவபெருமானை வழிபட வந்துவிட்டோமோ, அப்போதே இறைவன் நமக்கு அருள் செய்கிறார். நமக்கு தலையை கொடுத்ததே இறைவனை வணங்குவதற்காகத்தான். ‘சிரங்குவிவார் ஓங்குவிக்கும்’, அதாவது, தலை தாழ்த்தி வணங்குவோரை, உயர்த்துகிறார்.


இறைவனை, தலைமேல் வைத்து வணங்கவேண்டும். ‘நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி’ என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது அன்பே சிவமாக இருக்கிறார்.


எனவே, எல்லா உயிர்கள் மீது அன்பு காட்டவேண்டும். இந்த சமுதாயம் மீது அன்பு காட்டவேண்டும். அதுதான் திருவாசகம் முதலில் சொல்லும் உன்னதமான செய்தி.


அன்போடும் மகிழ்வோடும் செய்யும் வழிபாட்டுக்கு இறைவன் அனைத்தையும் அருளுகிறார். பெருமானை, அன்பு கொண்டு வழிபடவேண்டும். கட்டாயத்துக்காக அல்ல.


எவ்வளவு அருமையான வாழ்வை கொடுத்திருக்கிறார்; நல்ல சொத்து சுகங்களையெல்லாம் கொடுத்திருக்கிறார் என, ஒவ்வொரு நொடியும் அவருக்கு நன்றி சொல்லும் வகையில், மகிழ்வோடு வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவோர், எல்லாவிதமான நன்மையும் பெறுவர்.


இவ்வாறு, அவர் பேசினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 
temple news
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், வரும் 8 ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar