ராசிபுரம்: ராசிபுரம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக, ஹவுசிங் போர்டில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில், மழை வேண்டி, சிறப்பு வேள்வி யாக பூஜை மற்றும் கலச யாகம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஐந்து மணி நேரம், தொடர்ந்து நடந்த யாக பூஜையில், பக்தர்கள் ஆதிபராசக்தியை வாழ்த்தி பாடினர்.