வல்லம்:வல்லம் கிராமத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.செங்கல்பட்டு வல்லம், நேரு நகரில், கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு, 17 ஆண்டுகளாக, கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இரவு, 9:30 மணிக்கு, கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை, காளிதாஸ் செய்திருந்தார்.