உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா, மாரனோடை துாய விண்ணரசி அன்னை திருத்தலத்தின் ஆண்டு பெரு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 7ம் தேதி மாலை கொடியேற்றம் நடந்தது. சென்னை சலேசிய மாநில தலைவர் ஜோஸ் கொடியேற்றி வைத்து, திருப்பலி நிகழ்த்தினார். மறுநாள், பாளையம் பங்கு தந்தை ஜான்கென்னடி தலைமையிலும், 9ம் தேதி திருச்சி கிறிஸ்தோதயம் இயக்குநர் ஜான் பாப்டிஸ்ட், 10ம் தேதி சென்னை துாய மரியன்னை இணை பேராலய பங்கு தந்தை பாப்புராஜ், 11ம் தேதி சித்தானங்கூர் எம்மாவுஸ் ஆன்மிக மைய இயக்குநர் பிரான்சிஸ் சேவியர், 12ம் தேதி புதுச்சேரி சகோ இளங்கோ தியான லுாயிஸ், 13ம் தேதி கவரப்பேட்டை சலேசிய முன்னாள் மாநில தலைவர் பெல்லார்மின் பெர்னான்டோ, 14ம் தேதி குடந்தை மறைமாவட்டம் அடைக்கலசாமி தலைமையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை கெடிலம் வின்சென்ட் ராபர்ட், சென்னை சலேசிய மாநில துணை தலைவர் ஜான்போஸ்கோ, மாரனோடை ஆன்மிக பங்கு தந்தை ஏசுதாஸ் மற்றும் மாலையில் வில்லியனுார் துாய லுார்து அன்னை திருத்தல அதிபர் பிச்சைமுத்து தலைமையிலும் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது.