பதிவு செய்த நாள்
18
ஆக
2017
12:08
நாமக்கல்: நாமக்கல், வண்டிக்கார இரண்டாவது தெரு எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஹோம குண்டம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் மற்றும், 17வது ஆண்டு விழா துவங்கியது. தொடர்ந்து, எட்டு நாட்களுக்கு, நாள்தோறும் கட்டளைதாரர்கள் நிகழ்ச்சி, ஆக., 27 காலை, 7:00 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்தல், கரகம் பாலித்து வருதல் ஆகியவை நடக்கின்றன. 28 மாலை, 4:00 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், 29ல் வடிசோறு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. ஆக., 30 காலை மஞ்சள் நீராடுதல், கிடா வெட்டுதல், வேல், கரகம் திரும்ப விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள், மக்கள் செய்துள்ளனர்.