பல்லடம்:கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, காமநாயக்கன்பாளையம் பெருமாள் கோவிலில், உறியடி திருவிழா நடைபெற்றது.பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பிக்கு விதமாக, பக்தர்கள் பங்கேற்ற உறியடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா அலங்காரம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாரத மாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.விழாவில், காமநாயக்கன்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.