வடமதுரை: அய்யலுார் அருகே பறையமலைகரடு. இங்கு வெள்ளைக்கல் ஆண்டி, கருப்பசாமி, கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அய்யலுார் பேரூராட்சி, சுக்காம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பல குக்கிராம மக்கள் ஒருங்கிணைந்து 3 நாள் உற்சவ திருவிழா நடத்துகின்றனர். இந்தாண்டு திருவிழா கடந்த 18ம் தேதி தீர்த்தம் தெளித்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கிடாய் அழைப்பு, பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், பொது அன்னதானம், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவடைந்தது.