Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாறு அணையில் மழை வேண்டி ... காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்த்தி விழாவிற்கு தயாராகும் பிரமாண்ட விநாயகர் சிலைகள்
எழுத்தின் அளவு:
சதுர்த்தி விழாவிற்கு தயாராகும் பிரமாண்ட விநாயகர் சிலைகள்

பதிவு செய்த நாள்

24 ஆக
2017
11:08

வில்லியனுார்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மரவள்ளி கிழங்கு மாவு, களிமண் மற்றும் காகித கூழ் போன்றவற்றை கொண்டு, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ௨௫ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படும். இதற்காக, பல்வேறு இடங்களில், 6 இன்ச் முதல் 25 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகள் ரூ.30 முதல் 30 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளன.

இந்தாண்டு பாகுபலி விநாயகர், சிவசக்தி கணபதி, மயில்வாகன விநாயகர், காமதேனு கற்பபக விநாயகர், தாமரை விநாயகர், நந்தி விநாயகர், ரிஷப விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், விவசாய விநாயகர், அனந்த சயன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிக்கப்படுகின்றன. சுற்றுசூழலை பாதிக்காத வகையில் காகித கூழால் ஆன கலவையால், இச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப களிமண் அல்லது காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் தயாரித்து அனுப்பப் படுகின்றன.

வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்த சேகர், 40 ஆண்டுகளாக டெரக்கோட்டா பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது டெரகோட்டா மையத்தில் சேலம் மற்றும் பண்ருட்டி பகுதியில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு மாவு, கல் நார் மற்றும் காகித கூழ் உள்ளிட்ட கலவைகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டு வருகிறது. இங்கு தயாராகும் விநாயகர் உள்ளூர் மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar