Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆவணி மூலத்திருவிழா: நாரைக்கு ... திருப்பரங்குன்றம் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா திருப்பரங்குன்றம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் கொண்டாட்டம் துவக்கம்: செப்.4 திருவோணம்
எழுத்தின் அளவு:
ஓணம் கொண்டாட்டம் துவக்கம்: செப்.4 திருவோணம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
11:08

நாகர்கோவில், ஆவணி அஸ்தம் நட்சத்திரமான ஆக.25ம் தேதி ஓண கொண்டாட்டம் தொடங்கியது. இனி 10 நாட்கள் மலர்களால் அமைக்கப்படும் கோலங்கள் மக்களை வரவேற்கும்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரத்தில் வாமன அவதாரத்தை விளக்குவதுதான் திருவோண பண்டிகையின் வரலாறு. திருக்காக்கரை பகுதியை வாய்மை தவறாமல் ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்று அடி நிலம் கேட்ட போது தருகிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்ற மூன்றாவது அடிக்கு தனது தலைை-யை கொடுத்து மண்ணுக்குள் அந்த மன்னர் மாய்ந்து போனார். அவ்வாறு மாய்ந்த மன்னர் விஷ்ணுபகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி மாதம் ஓணம் நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம்.

செப்., 4-ம் தேதி திருவோண பண்டிகை . அதற்கு முன்னோடியாக அஸ்தம் நட்சத்திர தினமான ஆக.25ம் தேதி காலையில் ஓண கொண்டாட்டம் தொடங்கியது. வீடுகளின் முன் மலர்களால் அமைக்கப்பட்ட கண்கவர் கோலங்கள் அணி வகுத்தது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் நேற்று காலை அத்தப்பூகோலம் போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர். ஓண கொண்டாட்டம் 2வது நாளில் கோலம் மெருகூட்டல் தொடர்ந்து ஒவ்வொறு நாள்களிலும்,ஓணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், அறுசுவை விருந்துக்கான ஆயத்தம்,படகு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்துதல், கலாசார விழாக்கள் நடத்துதல், அத்தப்பூ கோலத்தை மேலும் மெருகூட்டுதல், அத்தப்பூ கோலத்தில் களிமண் மேடு அமைத்து அலங்கரித்தல், திருவோணத்தை வரவேற்கும் முன்னேற்பாடுகள், கடைசி நாளான பத்தாம் நாளன்று திருவோணத்தை அறுசுவை உணவுடன், புத்தாடை அணிந்து கொண்டாடுதல். இப்படி 10 நாட்கள் கேரளா மட்டுமல்ல, அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஓண கொண்டாட்டம் களை கட்டும். ஓணத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் பூக்களின் விலை உயர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar