Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் கோயிலில் செப்.2ல் ... ஹனுமன் கோயிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை ஹனுமன் கோயிலுக்கு முஸ்லிம்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு: அறம் வரலாற்று ஆய்வு மைய குழு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
11ம் நூற்றாண்டு சோழர் கால பாறை கல்வெட்டு: அறம் வரலாற்று ஆய்வு மைய குழு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

31 ஆக
2017
12:08

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, 11ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால பாறை கல்வெட்டை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, அதன் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மல்லிகார்ஜூன துர்க்கம் மலையில், சிவன் கோவில் உள்ளது. 1,200 அடி உயரமுள்ள இந்த மலையில், பாறை கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். மலையின் உச்சியில், திப்பு சுல்தான் கட்டியதாக கருதப்படும் கோட்டை சுவரின் எச்சங்கள் இன்றளவும் உள்ளன. சிவன் கோவிலின் அருகே அம்மன் கோவில் மற்றும் நீர்ச்சுனை உள்ளணீ. இந்த நீர்சுனையில், கடும் வறட்சியிலும் கூட தண்ணீர் வற்றுவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும், மலை மீதுள்ள கோவிலின் மீது இடி விழுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இடி விழுந்த காரணத்தால், ஒரு நந்தி சிலை முழுமையாக சேதமடைந்திருப்பதாக, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மல்லிகார்ஜூன மலையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள, மூன்று அடி அகலம், ஐந்து அடி நீளம் கொண்ட பாறை கல்வெட்டு, 11 அல்லது, 12 ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறு, சிறு நாடுகளை ஒன்றிணைத்து, ராஜேந்திர சோழ வளநாடு உருவாக்கப்பட்டது. இந்த சோழ வள நாட்டின் உட்பகுதியாக தான், முரசு நாடு, மாசாத்தி நாடு போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. இதை தான் இக்கல்வெட்டின் முதல் வரி குறிப்பிடுகிறது. ராஜேந்திர சோழ வளநாட்டில் இருக்கும், கல்லக நாட்டின் சேலைபுரத்தை, தனியாக நின்று வெற்றி பெற்ற முரசை பிரான் என்பவன், தீத்தமலையில் இருக்கும் சிவன் கோவிலுக்கு, நிலங்கள் தானமாக தந்துள்ளான். அதற்கான, நான்கு புற எல்லையையும் இந்த கல்வெட்டு குறிப்பிடுவதுடன், தானத்தை யாராவது அழிக்க முற்பட்டால், கங்கையில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள பசுவை கொன்றதற்கு சமமாகும் என, கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar