திருவாடானை: தொண்டி அருகே சோலியக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.