Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளைகாப்பு நடத்த வேண்டியது ... மழை தரும் ஏகாதசி புரட்டாசி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரியவரின் சமயோசிதம் - திருப்பூர் கிருஷ்ணன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
05:09

ஆந்திராவிற்கு யாத்திரை சென்ற  காஞ்சிப்பெரியவர்,  சீடர்களோடு விறு விறுவென்று நடந்து கொண்டிருந்தார். முன் ஏற்பாடு எதுவும் கிடையாது. கிடைத்த இடங்களில் தங்கினார். எந்த இடத்தில் தங்கலாம் என உத்தரவு போடுகிறாரோ, அங்கு வசதி இல்லாவிட்டாலும் சீடர்கள் தங்கினர். சுவாமிகளின் வாழ்க்கை முறை எளியது. குளிப்பதற்கு குளம், படுப்பதற்கு கோயில் பிரகாரம் இருந்தால் போதும். அவரின் தேவை முடிந்து விடும். பக்தர்கள் தரும்  பிட்சையை உணவாக ஏற்றுக் கொள்வார். அவ்வளவே அவர் வாழ்வு. ஒரு கிராமத்தின் பழமையான சிவன் கோயிலில் அவர் தங்கியிருந்த போது, உச்சிக்கால பூஜை அப்போது தான் முடிந்திருந்தது. சுவாமிகள் அங்கு வந்த பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின் மண்டபத்தில் களைப்பு தீரப் படுத்து கொண்டார். சீடர்களும் படுத்தனர். அர்ச்சகருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. இவர்கள் உள்ளே இருப்பது தெரிந்தும், கோயில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இதற்குள்  பெத்தச்ச தேவுடு (பெரிய மகான்) கோயிலுக்கு வந்து, உள்ளே தங்கியிருந்த சேதி ஊரெங்கும் பரவி விட்டது.  ஏராளமானோர் கோயிலின் முன் திரண்டனர். கோயிலோ பூட்டியிருந்தது. அப்படியானால் கிடைத்த தகவல் தவறா? சுவாமிகள் சென்று விட்டாரா? மக்கள் குழப்பத்துடன் நின்றனர்.

கோயிலுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்கவே, பெரியவர் எழுந்து விட்டார். ஜன்னல் வழியாக ஒரு சீடனை வெளியே பார்க்கச் சொன்னார். கோயில் பூட்டியிருப்பதையும், பக்தர்கள் தரிசிக்க கூடியிருப்பதையும் உணர்ந்து கொண்டார். அவர்கள் ஏமாற்றம் அடைவதை பெரியவர் விரும்பவில்லை. கதவைத் திறந்தாக வேண்டும். உள்ளே தான் இருப்பதை உணர்த்தி அவர்கள் திரும்பி போவதை தடுக்க வேண்டும். என்ன செய்வது? சீடன் ஒருவனை அழைத்து அங்கிருந்த கல் மீதேறி உயரே  கட்டியிருந்த மணியை அடிக்கச் சொன்னார்  சுவாமிகள். பெரியவரின் இந்த சமயோசித முடிவால், மக்கள் மணியோசை கேட்டனர். காவலாளி மாற்று சாவியோடு ஓடி வந்தார். கோயில் திறக்கப்பட்டது.பிறகென்ன! வந்த பக்தர்களை அன்போடு அமரச் செய்தார். அவர்களுக்கு அனுக்கிரகம் தந்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar