புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல் கேட் அருகே பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமி தீப விழா நேற்று முன்தினம் 4ம் தேதி நடந்தது. இதையொட்டி, அன்று பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை பாலா திரிபுரசுந்தரி அம்பாள், ராஜமாதங்கி, வாராகி, பைரவர் புறப்பாடு, மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பவுர்ணமி நவாவர்ண பூஜை, தீபாராதனை, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்திருந்தனர்.