பதிவு செய்த நாள்
05
செப்
2017
12:09
திருக்கழுக்குன்றம் : வீராபுரம் செங்கழணியம்மன் கோவிலில், தீமிதி விழா கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, வீராபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற செங்கழணியம்மன் கோவில் உள்ளது. இங்கு, பிரம்மோற்சவ விழா, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. நிறைவு விழா நாளில், இரவு, 7:00 மணிக்கு, தீமிதி விழா கோலாகலமாக நடந்தது. இரவு, 10:00 மணிக்கு விநாயகர், செங்கழணியம்மன், சோலைவாழியம்மன் வீதி உலா எழுந்தருளினர். முன்னதாக, ஊரணி பொங்கல் வைத்தல், மஹா அபிஷேகம், அலகு பானை பிரவேசம், தீபாராதணை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.