ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வாசலில் ’கழிவு துணி’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2017 12:09
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் கோபுர வாசலில் பக்தர்கள் வீசிய கழிவு துணியை தரம் பிரிக்கும் இடத்தை மாற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் புனித நீராடி விட்டு பக்தர்கள் விட்டு செல்லும் கழிவு துணியை, கோயில் துப்புரவு ஊழியர்கள் சேகரித்து, பயன்பாட்டில் இல்லாத தெற்கு கோபுர நுழைவு வாசலில் தரம் பிரித்து மூடை கட்டுவதால், கோபுர வாசல் கழிவு துணிகளின் கிடங்காக மாறி உள்ளது. இதனால் தெற்கு கோபுர வாசலில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு துணிகளை தரம் பிரிக்க தனிகொட்டகை அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.