பதிவு செய்த நாள்
19
செப்
2017
12:09
மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை, காவிரி மகா புஷ்கரம் விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில், 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். மயிலாடுதுறையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, அமைச்சர், ஓ.எஸ். மணியன் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர், பழனிசாமி, 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுகிறார். பின், நாகையில் மாலை நடைபெறும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள செல்கிறார். அமைச்சர்கள் பலர் புனித நீராட வருவர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.