கல்வி தெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா? ‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ . ‘வதி’ என்றால் ‘வாழ்பவள்’. சரஸ்வதி என்றால் மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள். இவளை கலைமகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞானவடிவு, பனுவலாட்டி, பிராஹ்மி, பூரவாஹினி, அயன்மனைவி, வெண்தாமரையாள், சாவித்திரி வாக்தேவி என்ற பெயர்கள் சூட்டியும் அழைப்பர்.