திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நேற்று (20ம் தேதி) கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு பாரசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 21ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 22ம் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 23ம் தேதி மனோன்மணி அலங்காரமும், 24ம் தேதி ரிஷப வாகன அலங்காரமும் நடைபெற உள்ளது. விழாவானது வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. 29ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் பாரசக்தியம்மனுக்கு அபிஷேகமும், காலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது.