பதிவு செய்த நாள்
28
செப்
2017
12:09
ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் நவராத்திரி விழாவில், உற்சவர் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈரோடு, கோட்டை சின்னபாவடியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில், 18ம் ஆண்டு நவராத்திரி விழா, கடந்த, 21ல் தொடங்கியது. வரும், 30 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மூலவருக்கு தினமும் அதிகாலை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலையில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் உற்சவர், கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோட்டை, தில்லைநகர், வள்ளுவர் வீதி, வாசுகி வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.