வாழப்பாடி: புரட்டாசி சனி முன்னிட்டு, வாழப்பாடி, புதுப்பாளையம் மாயவன் கோவிலில், வரும், 7 காலை, 11:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத மாயவன் சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைக்கு பின், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.