சிறப்பு அலங்காரத்தில் செஞ்சி வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2017 01:10
செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்தனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தங்க அங்கி மற்றும் துளசி மாலை அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு ஐந்தாயிர் லட்டுகளை கொண்டு நெய்வேத்யம் செய்தனர். இதே போல் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.