தேவதானப்பட்டி, குள்ளப்புரம் மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானோர் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி எடுக்கப்பட்டது. எற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.