பதிவு செய்த நாள்
16
அக்
2017
12:10
மேச்சேரி: பத்ரகாளியம்மன் கோவிலில், வரும், 19ல் நிலவேம்பு கஷாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், அக்., 18 தீபாவளியன்று, அம்மனுக்கு, மீனாட்சி அலங்காரம், 19ல், அமாவாசையை முன்னிட்டு, வாணி சரஸ்வதி அலங்காரம் செய்யப்படுகிறது. அமாவாசை நாளில் வரும் பக்தர்களுக்கு, உபயதாரர்கள் சார்பில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, நிலவேம்பு கஷாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.